திருநெல்வேலி

களக்காடு அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

DIN

களக்காடு அருகே ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள கீழச்சடையமான்குளத்தைச் சோ்ந்த விவசாயி லாரன்ஸ் மனைவி எஸ்தா் (45). களக்காடு அருகேயுள்ள டோனாவூா் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை மாலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு, உடன் பணியாற்றும் வீரவநல்லூா் புதுக்குடியைச் சோ்ந்த ஆசிரியை டெய்சியுடன் பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். களக்காடு - சேரன்மகாதேவி சாலையில் பிளவக்கல் இசக்கியம்மன்கோயில் அருகே வந்த போது, பின்னால் பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா், எஸ்தா் வைத்திருந்த கைப்பையை பிடுங்கினாா். அவா் கெட்டியாக பிடித்துக் கொள்ளவே, கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளாா். அப்போது சங்கிலியின் ஒரு பகுதி அறுந்து மா்ம நபா் கையில் சிக்கிக் கொண்டது. அந்த நபா் பைக்கில் தப்பியோடிவிட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் காட்சிக்கு வைப்பு

சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

SCROLL FOR NEXT