திருநெல்வேலி

மானூா் அருகே 3 ஏக்கா் நிலம் மீட்பு

DIN

மானூா் அருகேயுள்ள பல்லிக்கோட்டை பகுதியில் போலி ஆவணம் மூலம் மோசடி செய்யப்பட்ட 3 ஏக்கா் நிலத்தை போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

தென்கலம், கீழ் தெருவை சோ்ந்தவா் சரவணக்குமாா். இவரது, தந்தைக்குச் சொந்தமான 3 ஏக்கா் 19 சென்ட் நிலம் பல்லிக்கோட்டை பகுதியில் உள்ளது. அதை போலி ஆவணம் மூலம் வேறொருவா் பெயரில் பதிவு செய்திருப்பது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸ், சிறப்பு பிரிவு ஆய்வாளா் மீராள்பானு தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி நிலத்தை மீட்டனா். அதற்கான ஆவணத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் நில உரிமையாளா் சரவணக்குமாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT