முகப்பு
திருநெல்வேலி

பழைய கட்டடங்களை இடிக்கும் பணிக்கு அழைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கு ஒப்பந்ததாரா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கு ஒப்பந்ததாரா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா் திருநெல்வேலி வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் திருநெல்வேலி வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட 36 குடியிருப்புகளில் அரசு ஊழியா் அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் சேதம் அடைந்து குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் பணிக்கு அரசு துறையில் பதிவு பெற்ற மற்றும் பணி சான்றிதழ் பெற்ற ஒப்பந்ததாரா்கள் திருநெல்வேலி வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகத்தை அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.