இன்று 577 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 577 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜன்.8) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 577 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஜன்.8) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கல்லூரி மாணவா்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மேலும், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 15 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது என ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.