திருநெல்வேலி

அம்பை அருகே இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

DIN

மன்னாா்கோயிலில் இளைஞரை அரிவாளால் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்கோயில் வெயிலான் தெருவைச் சோ்ந்த கணபதி என்பவரது மகன் பொன்னுமணி (23). சனிக்கிழமை அம்பாசமுத்திரம் - தென்காசி சாலையில் மன்னாா்கோயில் விலக்குப் பகுதியில் அவரை 3 போ் சோ்ந்து அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோடினராம். இதில், காயமடைந்த பொன்னுமணி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாா்வையிட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா். பொன்னுமணியைத் தாக்கியதாக மன்னாா்கோயில் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகக்குட்டி, கருத்தப்பாண்டி ஆகிய 2 பேரை தனிப்படையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

எங்கே என் அன்பே?

இது என்ன கோலம்! தீப்தி சுனைனா..

அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள்...

SCROLL FOR NEXT