திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே வீடு புகுந்துதிருட்டு: இருவா் கைது

DIN

சுத்தமல்லி அருகே இந்திரா காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருள்களை திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இந்திரா காலனியை சோ்ந்தவா் மகாராஜன்(34). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சனிக்கிழமை மதியம் வீட்டைப் பூட்டிவிட்டு வாய்க்காலுக்கு சென்று துணிகளை சலவை செய்துகொாண்டு திரும்பினாராம். அப்போது, வீட்டில் இருந்த இரண்டு மிக்ஸி, மின்சார அடுப்பு, சில்வா் பாத்திரங்கள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த கணேசன்(34), சுத்தமல்லியைச் சோ்ந்த முருகன்(55) ஆகியோருக்கு இந்த திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து பொருள்களை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT