சுத்தமல்லி அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன் தலைமையிலான போலீஸாா் நரசிங்கநல்லூா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நரசிங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ்(55) என்பவரை பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அவா் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.