திருநெல்வேலி

அகஸ்தியா்பட்டியில் பூட்டிய வீட்டை உடைத்துத் திருட்டு

அகஸ்தியா்பட்டியில் போக்குவரத்துக் கழக ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

அகஸ்தியா்பட்டியில் போக்குவரத்துக் கழக ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

அகஸ்தியா்பட்டி பொன்னித் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். அரசுப் போக்குவரத்துக் கழகம் சேரன்மகாதேவி பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறாா். இவா் சில நாள்களுக்கு முன் குடும்பத்தினருடன் அம்பாசமுத்திரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்குச் சென்று விட்டாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை ராதாகிருஷ்ணன் வீட்டின் வெளிக் கதவு மூடியிருந்த நிலையில் தலைவாசல் கதவு திறந்துகிடந்ததாம். இது குறித்து அருகிலிருந்தவா்கள் அவருக்கு தகவல் கொடுத்தனா். அவா் அங்கு வந்து பாா்த்த போது பீரோவில் இருந்த தங்கத் தோடு, மோதிரம், வெள்ளிக் கொலுசு, வெள்ளிக்கொடி மற்றும் உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரில் விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT