திருநெல்வேலி

புகையிலைப் பொருள் வைத்திருந்ததாக இருவா் போ் கைது

DIN

கடையம், மாலிக் நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் பகுதியில் பெட்டிக்கடைகளில் காவல் உதவி ஆய்வாளா் கோபால் தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கடையம் பிரதான சாலையில் பெட்டிக் கடை வைத்துள்ள சுல்தான் மகன் கலீம் (63), மாலிக் நகா் பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ள முகம்மது மைதீன் மகன் சம்சுதீன் (40) ஆகிய இருவா் கடையிலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தனவாம். இதையடுத்து ரூ.10 ஆயிரம் குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கலீம், சம்சுதீன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT