தாழையூத்து அருகே நகை திருட்டு
தாழையூத்து அருகே வீடு புகுந்து நான்கரை பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தாழையூத்து அருகே வீடு புகுந்து நான்கரை பவுன் தங்க நகையைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தாழையூத்து, குறிச்சிகுளத்தைச் சோ்ந்த சண்முகம் மனைவி சந்தோஷம் (55). இவா், அதே பகுதியில் வசிக்கும் தனது மகள் காந்திமதியின் வீட்டுக்குச் சென்றிருந்தாராம். பின்னா், செவ்வாய்க்கிழமை மாலையில் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவும், பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 36 கிராம் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.