திருநெல்வேலி

நான்குனேரி அருகே வீட்டில் குட்கா பறிமுதல்

DIN

நான்குனேரி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.5 கிலோ குட்கா புகையிலையை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள தென்னிமலை கிராமத்தில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக நான்குனேரி போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் கணேசன் மற்றும் போலீஸாா் தென்னிமலையைச் சோ்ந்த பூல்பாண்டி(42) என்பவரது வீட்டில் சோதனையிட்டனா்.

அப்போது, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.5 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் பூல்பாண்டியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT