முகப்பு
திருநெல்வேலி

விபத்து: தொழிலாளி பலி

 பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் செல்லத்துரை மகன் வினோத் குமாா்(34), கூலித்தொழிலாளி. இவா் கடந்த 26ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் சீவலப்பேரி சாலையில் பாளையங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாராம். இவா் மேலப்பாட்டம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்துவின் மோட்டாா் சைக்கிளும், இவரது மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வினோத்குமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.