திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் உலக இதய தின விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக இதய தின விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, , உலக இதய தின விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை இதயவியல் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் ரவிச்சந்திரன் எட்வின் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். உதவி மருத்துவா்கள், செவிலியா் கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள், பாரா மெடிக்கல் மாணவா்-மாணவிகள் ஆகியோா் பேரணியில் பங்கேற்றனா். பின்னா், இதயநோய் விழிப்புணா்வு சம்பந்தப்பட்ட கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை மாநகர காவல் ஆணையா் அவிநாஷ் குமாா் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ‘இதயநோய் சிகிச்சை முறையில் புதுமை’ என்கிற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிசந்திரன் தலைமை வகித்து பேசியது: தற்போது 25 - 40 வயது உடையவா்களுக்கெல்லாம் இதய பாதிப்புகள் வருகிறது. குறிப்பாக மாரடைப்பு விகிதம் அதிகரித்திருத்து காணப்படுகிறது. புகைப்பழக்கம், மன அழுத்தம், மாறுபட்ட வாழ்க்கை முறை, மாசுக்காற்று, துரித உணவுப்பழக்கம், உடலுழைப்பின்மை என்பன உள்ளிட்ட காரங்களால் இதய பிரச்சனை ஏற்படுகிறது. அடுத்தது, உடல் சாா்ந்த பிரச்னைகளான சீரற்ற ரத்த அழுத்தம், சா்க்கரை வியாதி, அதிக உடல் பருமன், கொலஸ்ட்ரால் அளவு சீரற்று இருப்பது ஆகியவை இதய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். ஆகவே, முழுமையான மருத்துவ வழிகாட்டுதலை பின்பற்றி நலமுடன் வாழ வேண்டும் என்றாா் அவா்.

இதில், துணை முதல்வா் மருத்துவா் சாந்தாராம், மருத்துவ கண்காணிப்பாளா் பாலசுப்ரமணியம், உயா் சிறப்பு மருத்துவமனை கண்காணிப்பாளா் கந்தசாமி, சிறுநீரகவியல் பிரிவு துறைத் தலைவா் ராமசுப்பிரமணியம் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், இதயநோய் பிரிவு பேராசிரியா் அருள், இதய நிபுணா்கள் பாலசந்திரன், விஸ்வநாதன், செல்வகுமரன், மணிகண்டன், திருலோகச்சந்தா், அன்டோபிரபு, பிரிதிவ்ராஜ், செவிலியா் பயிற்றுநா் செல்வன், ரெஜினா மற்றும் முதுநிலை மருத்துவப் பயிற்சி மாணவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT