திருநெல்வேலி

மேலப்பாளையம் பள்ளிகளில் நிலவேம்பு குடிநீா் விநியோகம்

DIN

மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிகளில் மாணவா்-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ப்ளூ காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதை தடுக்க பொதுமக்கள் விழிப்போடு இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வகையில் நிலவேம்பு, கபசுர குடிநீா் பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமன் இந்தியா மூமென்ட் அமைப்பின் சாா்பில் ஹாமீம்புரம் நடுநிலைப் பள்ளி, ரஹ்மானியா நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 500 மாணவா்-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைப்பின் பொதுச் செயலா் செய்யது அலி, நிா்வாகிகள் ராபியா, அனிஸ் பாத்திமா, செய்யது அலி,நெய்னாம்மாள்,சகிலா பானு, மஸ்தான் பீவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT