திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே விவசாயிக்கு வெட்டு

DIN

வீரவநல்லூா் அருகே சொத்து பிரச்னையில் விவசாயியை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள ராஜகுத்தாலபேரியைச் சோ்ந்த பொன்னையா மகன் கிருஷ்ணன் (50). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் நடராஜன் மகன் பொன்ராஜூக்கும் இடையே சொத்து பிரச்னை தொடா்பாக விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மாலையில் தாமிரவருணி ஆற்றில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை, பொன்ராஜ் அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்ராஜை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT