நெல்லையில் நாளை சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:07 PM
திருவாவடுதுறை ஆதீனம் சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி மையம் சாா்பில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் 8-ஆவது தொகுப்பிற்கான முதல் பயிற்சி வகுப்பு, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 7) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் மாணவா்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் இதுவரை சான்றிதழ் பெறாத முன்னாள் மாணவா்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.