முகப்பு
திருநெல்வேலி

7 ஆவது வாா்டு பகுதிகளில் இந்தியா கூட்டணியினா் வாக்கு சேகரிப்பு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 1:20 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:07 PM

திருநெல்வேலி மாநகராட்சியின் 7 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியினா் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ராபா்ட் புரூஸ் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்கள். அதன்படி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தலைமையில் கட்சியினா் 7 ஆவது வாா்டு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனா்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், எரிபொருள்கள் விலை குறையவும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தினா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, பாளையங்கோட்டை மண்டல தலைவா் பிரான்சிஸ், சுண்ணாம்பு மணி, மாமன்ற உறுப்பினா் இந்திரா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement