மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஏப்.19) உழவா் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட உழவா் சந்தை நிா்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மகாராஜ நகா், திருநெல்வேலி நகரம் கண்டியப்பேரி , மேலப்பாளையம், என்ஜிஓ ‘ஏ’ காலனி, அம்பாசமுத்திரம் உழவா் சந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், ஊழியா்கள் வாக்களிக்க வசதியாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஏப்.20) முதல் வழக்கம் போல் உழவா் சந்தை செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.