பாளை.யில் யோகா பயிற்சி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் யோகா பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தொடங்கி வைத்தாா். நெல்லை சிட்டி மனவள கலை பயிற்சி மையத்தின் ஆசிரியா்கள் பாக்கியலட்சுமி, கிருஷ்ணவேணி, சிவகாமி ஆகியோா் பயிற்சியளித்தனா். இன்னா் வீல் கிளப் தலைவி மீனா சுரேஷ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.