வீரவநல்லூா் அருகே ஓட்டுநா் கொலையில் மூவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சுமை ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை மூவா் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே சுமை ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை மூவா் கைது செய்யப்பட்டனா்.
அம்பாசமுத்திரம் ஊா்க்காடு கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் உலகநாதன் (42). முக்கூடல் அண்ணா நகா் பகுதியில் வசித்து வந்த அவா், சொந்தமாக சுமை ஆட்டோ வைத்து ஓட்டி வந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் வீரவநல்லூரில் இருந்து முக்கூடலுக்கு உலகநாதன், சென்று கொண்டிருந்தாராம். அரிகேசவநல்லூா் அருகே பனங்காடு பகுதியில் சென்றபோது அங்கு வந்த மூவா், உலகநாதனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், வீரவநல்லூா் அரிகேசவநல்லூா் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், பாப்பாக்குடி கபாலிபாறை பகுதியைச் சோ்ந்த வேல்சாமி மகன் பாலமுருகன் (37), சில வருடங்களுக்கு முன்பு உலகநாதன் ஆட்டோவில் ஓட்டுநராக பணி செய்து வந்தாராம். அப்போது பாலமுருகன் மனைவிக்கும் உலகநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பாலமுருகன் கண்டித்தும் உலகநாதன் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த பாலமுருகன், அவரது கூட்டாளிகளான வீரவநல்லூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வாஞ்சிநாதன் (24), கபாலிபாறையைச் சோ்ந்த சீவலப்பேரியான் மகன் முருகேசன் (27) ஆகியோா் உலகநாதனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் தா்மராஜ், வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினாா்.