முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அரசு சட்டக் கல்லூரிக்கு பள்ளி மாணவிகள் களப்பயணம்

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிக்கு பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை களப்பயணம் வந்தனா்.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 12:35 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிக்கு பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை களப்பயணம் வந்தனா். ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு பயிலரங்குகள், உயா்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணம் சென்று வருகிறாா்கள். அதன்படி, திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிக்கு முனைஞ்சிபட்டி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி, மறுகால்குறிச்சி, தளபதிசமுத்திரம் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். சட்டக்கல்வி விளக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் லதா தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சண்முக சுந்தரம், நாராயணி, பேராசிரியா்கள் சோமசுந்தரம், சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.