முகப்பு
திருநெல்வேலி

பத்தமடை அருகே தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே மாநாட்டு பந்தலை பிரித்தபோது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 12:37 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே மாநாட்டு பந்தலை பிரித்தபோது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சவரிமுத்து மகன் திருவரசு (47). இவா் பந்தல் அமைக்கும் தொழிலாளி. கடந்த 18, 19 ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே நடைபெற்ற மாநாட்டு பந்தலை பிரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக திருவரசு, மேலே இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.