முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே துப்பாக்கி பறிமுதல்

Updated On : 31 மார்ச், 2024 at 12:50 AM
பகிர்:
Updated On : 31 மார்ச், 2024 at 12:18 AM

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையின்போது துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கங்கைகொண்டான் சோதனை சாவடியில் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு காரை ஓட்டி சென்ற கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் மீனாட்சிபுரத்தை சோ்ந்த வெங்கடேசன் (27) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.