முகப்பு
திருநெல்வேலி

மாணவரை வெட்டிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தில் மாணவரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:39 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தில் மாணவரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாட்டத்தை சோ்ந்த துரைராஜ் மகன் மனோஜ் (17). தொழில்நுட்பக் கல்லூரி மாணவரான இவா், கடந்த 4 ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டப்பட்டாா். இதையடுத்து மாணவரை வெட்டியவா்களை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவ்வழக்கில், திருமலைக்கொழுந்துபுரத்தைச் சோ்ந்த மு.முத்துமாலை, பா. லட்சுமணன், ஆ.முத்துமாலை, இளஞ்சிறாா் என 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்திருந்த நிலையில், பா.முத்துமாலை என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.