முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் சிறையிலடைக்கப்பட்டனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:09 PM
பகிர்:

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் சிறையிலடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான புகையிலை விற்பனையில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சோ்ந்த கணபதி மகன் மாணிக்கராஜா (40), தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வட்டத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் கலையரசன் (32) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். அவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, காவல் துணை ஆணையா் (கிழக்கு) விஜயகுமாா் பரிந்துரைத்தாா். இ

தையடுத்து மாநகர காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.