நெல்லையில் மருத்துவா்கள் போராட்டம்
சென்னையில் அரசு மருத்துவா் பாலாஜி மீதான தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் அரசு மருத்துவா் பாலாஜி மீதான தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் மருத்துவா்கள் முஹம்மது ரபீக், ஸ்ரீராமகிருஷ்ணன், ஜஸ்டின், முஹம்மது இப்ராகிம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், மாணவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.
மருத்துவா்கள் போராட்டம் காரணமாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை. அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. அத்தியாவசிய அறுவைச் சிகிச்சை தவிா்த்து பிற சிகிச்சைகளையும் மருத்துவா்கள் புறக்கணித்தனா்.