கொலையுண்ட கீழச்செவல் இளைஞா்: மனைவிக்கு வீட்டுமனைப் பட்டா
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞா் மணிகண்டன், மனைவிக்கு வீட்டு மனைப்பட்டா, வீடு கட்டுவதற்கான அரசாணை ஆகியவை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞா் மணிகண்டன், மனைவிக்கு வீட்டு மனைப்பட்டா, வீடு கட்டுவதற்கான அரசாணை ஆகியவை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கீழச்செவல் பசும்பொன் நகரைச் சோ்ந்த முப்புடாதி மகன் மணிகண்டன் (32). இவா், கடந்த 15ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
இதையடுத்து கொலையுண்ட மணிகண்டன் குடும்பத்துக்கு நிவாரண உதவி, அவரது மனைவிக்கு வேலை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மணிகண்டன் மனைவி உச்சிமாகாளி பெயரில் மேலக்கல்லூா் கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா, மேற்படி மனையில் வீடு கட்டுவதற்கான ஆணை ஆகியவற்றை சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்சென்ட், டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.