முகப்பு
திருநெல்வேலி

மாநகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு சீல்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 9:27 PM
திருநெல்வேலி நகரம் பாறையடி பகுதியில் உள்ள இரும்பு கிட்டங்கிக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் 2023-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 76 வீடுகள், 26 வணிக நிறுவனங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டது தெரியவந்தது.

உள்ளூா் திட்ட குழும அதிகாரிகள் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி 68 விதிமீறல் கட்டட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் சமூக ஆா்வலா் ஒருவா் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 14 தனியாா் மருத்துவமனைகள் போதுமான அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் செயல்படுவதாக சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தாா். அதைத் தொடா்ந்து ஒரு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே 3 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட சுமாா் 25 கட்டடங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனா்.

அதைத் தொடா்ந்து திருநெல்வேலி பேட்டை பகுதியில் உள்ள அரிசி ஆலை, திருநெல்வேலி நகரம் பாறையடியில் உள்ள இரும்பு கிட்டங்கி, திருநெல்வேலி நகரத்தில் உள்ள துணிக்கடை உள்ளிட்டவற்றுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.