பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.11.37 லட்சம் மோசடி
திருநெல்வேலியைச் சோ்ந்த பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலியைச் சோ்ந்த பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெருமாள்புரம் காவல் சரகப் பகுதியில் வசித்து வரும் 39 வயதான பெண் ஒருவா், கடந்த 10.1.2024இல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாா்த்துக் கொண்டிருந்த போது, பங்குச்சந்தை பற்றிய பதிவு வந்ததாம். அதில், முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாம். அதை நம்பிய அவா், ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்து 41-ஐ அதுதொடா்பான லிங்க் மூலம் அனுப்பினாராம். ஆனால், அவருக்கு மீண்டும் ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 662 மட்டுமே திரும்பக் கிடைத்ததாம். ரூ.11 லட்சத்து 37 ஆயிரத்து 379 மீதி தராமல் இணையதள கும்பல் மோசடி செய்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து, இணையவழியில் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனா்.