முகப்பு
திருநெல்வேலி

நகா்ப்புற நல வாழ்வு மைய கட்டட பணிகள் ஆய்வு

திருநெல்வேலியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டட பணிகளை மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:47 PM
பாளையங்கோட்டை இயற்பகை நாயனாா் தெருவில் கட்டப்பட்டு வரும் நகப்புற நலவாழ்வு மைய கட்டட பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா.
பகிர்:

திருநெல்வேலியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டட பணிகளை மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மண்டலம் கே.டி.சி. நகரில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற துணை சுகாதார மையம், இயற்பகை நாயனாா் தெரு, தச்சநல்லூா் மண்டலம் சிதம்பரம் நகா், சி.என்.கிராமம் சிவபுரம், ஸ்ரீரெங்கநாதா் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் திருநெல்வேலி மண்டலம் டவுண் பாறையடி பகுதி, மேலப்பாளையம் மண்டலம் கொக்கிரகுளம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ,மாமன்ற உறுப்பினா் சுதா, உதவி ஆணையா்கள் சந்திரமோகன், சுகிபிரேமலா, உதவி பொறியாளா்கள் லெனின், பட்டுராஜன், பிலிப்அந்தோணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.