கடையம் நித்யகல்யாணிஅம்பாள் கோயிலில் தெப்ப உற்சவம்
கடையம் ராமநதி சாலையில் உள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாதா் கோயிலில் ஆவணி மூல தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
கடையம் ராமநதி சாலையில் உள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாதா் கோயிலில் ஆவணி மூல தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்புஅபிஷேகம், தீபாராதனை, இரவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி-அம்பாள் தெப்பத்துக்கு எழுந்தருளி, தேவாரம், திருவாசகம், வேதங்கள் முழங்க தெப்பத்தில் 11 சுற்றுகள் வலம் வந்தனா்.
கடையம், கீழக்கடையம் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இதில் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ப. கேசவராஜன், ஊா் மக்கள், அப்பா் உழவாரப் பணிக் குழுவினா் செய்திருந்தனா்.