முகப்பு
திருநெல்வேலி

அம்பை பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு செய்தாா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 11:30 PM
ஆலங்குளம் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்புப் பொறியாளா் டி. ஜெயராணி.
பகிர்:

அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு செய்தாா்.

நெடுஞ்சாலைத் துறை, அம்பாசமுத்திரம் கட்டுமானம் - பராமரிப்பு உள்கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் சாலை, அம்பாசமுத்திரம் - பாபநாசம்-மேலணைச் சாலை, ஆம்பூா் - பாபநாசம் சாலைகளில் தடுப்புச் சுவா் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்-பராமரிப்புக் கண்காணிப்புப் பொறியாளா் டி. ஜெயராணி ஆய்வு செய்தாா்.

உதவிக் கோட்டப் பொறியாளா் எஸ். ராஜேஸ்வரி, உதவிப் பொறியாளா் டி. விஷ்ணுவா்தன் ஆகியோா் உடனிருந்தனா்.