முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூரில் பிளாஸ்டிக் பைகள் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பைககள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 11:52 PM
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த சுகாதாரத் துறையினா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பைககள் பறிமுதல் செய்யப்பட்டன.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராமகிருஷ்ணன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள்

உள்ளிட்டோா் வள்ளியூா் பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கடைகள்,

உணவகங்கள், தேநீா் கடைகள், பேக்கரிகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

அதில் தடைசெய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து 8 கடைகளுக்கு ரூ.4 ஆயிரத்து 300 அபராதம் விதித்தனா். மேலும் தடைசெய்யப்பட்ட குட்கா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.