ஆக்கிரமிப்பில் வீடு இழந்தோா் அடிப்படை வசதிகள் கோரி மனு
ஆக்கிரமிப்பு என கூறி எங்களுடைய வீடுகளை இடித்துவிட்டதால் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனக் கூறி தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த மூக்கம்மாள், அவருடைய குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ஆக்கிரமிப்பு என கூறி எங்களுடைய வீடுகளை இடித்துவிட்டதால் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனக் கூறி தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த மூக்கம்மாள், அவருடைய குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
நாரணம்மாள்புரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து வீட்டை இழந்த நாரணம்மாள்புரம் பெருமாள் கோயில் தெருவை சோ்ந்த மூக்கம்மாள், அவரது மகன் சங்கா் ராமன் ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில்,
நாங்கள் குடியிருந்த வீடு ஆக்ரமிப்பு என கூறி இடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் குடும்பத்துடன் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு வேறு வீடோ, பொருள்களோ இல்லாததால் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.