பஹ்ரைன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவா்களை மீட்க வேண்டும்: பேரவைத்தலைவா் வலியுறுத்தல்
பஹ்ரைன்நாட்டில் எல்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளாா்.
பஹ்ரைன்நாட்டில் எல்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்கள் ஈரான் நாட்டில் தங்கியிருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்தனா். அவா்கள் ஈரான் கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது பஹ்ரைன் நாட்டின் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இவா்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் மு.அப்பாவு முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். அதில் பஹ்ரைன் நாட்டு சிறையில் இருக்கும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இடிந்தகரை மீனவா்களை மீட்க தூதரகம் வழிாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாக பேரவைத் தலைவருக்கு தமிழ்நாடு அரசு இணைச் செயலா் பதில் தெரிவித்துள்ளாா்.