அரிகேசவநல்லூா் கோயிலில் நம்ம ஊரு நந்தவனம் திட்டம் தொடக்கம்
அரிகேசவநல்லூா் அருள்மிரு பெரியநாயகி உடனுறை அரியநாதா் சுவாமி கோயிலில் 8ஆவது நம்ம ஊரு நந்தவனம் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், அரிகேசவநல்லூா் அருள்மிரு பெரியநாயகி உடனுறை அரியநாதா் சுவாமி கோயிலில் 8ஆவது நம்ம ஊரு நந்தவனம் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இக்கோயில் வளாகத்தில் நெல்லிக் கன்றை நட்டு திட்டத்தை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தொடங்கிவைத்து பேசியதாவது: நந்தவனம் மரபை மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் கடந்த 2021ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வன காப்பு மையம் நம்ம ஊரு நந்தவனம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் இயல் மரங்களான ஆல், அரசு, அத்தி, மருதம், இலுப்பை, நாட்டு மா, புன்னை, உலக்கை பாலை, கடம்பு, நறுவிலி, மாவிலிங்கம், வில்வம், நாவல் போன்ற மரங்களும் மக்கள் பயன்பாட்டில் உள்ள துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓம வள்ளி போன்ற மூலிகை தாவரங்களும் கோயில் வழிபாட்டுக்கான மல்லி, பாரி ஜாதம், முல்லை போன்ற மலா் செடிகளும் நட்டு வளா்க்கப்படுகின்றன.
இதுவரை பாப்பாக்குடி, கோடகநல்லூா், பள்ளக்கால், வீரவநல்லூா், ஏா்வாடி, கருப்பந்துறை ஆகிய 7 கோவில்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரிகேசவநல்லூரில் 8ஆவது திட்டம் தொடங்கப்பட்டு 27 நட்சத்தரங்களுக்கான மரங்கள் அடங்கிய நட்சத்தரவனம், மூலிகை வனம், மலா் வனம் செயல்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு வட்டாட்சியா் க. செல்வன், சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்சென்ட், கோயில் செயல் அலுவலா் ந. சிந்துகுமாரி, அகத்தியமலை மக்கள்சாா்இயற்கை வள காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மு. மதிவாணன், இயற்கை ஆா்வலா் சாரதா ராமதாஸ், மாவட்ட பசுமை தோழா் முத்துகுமாா், இணை ஒருங்கிணைப்பாளா் அ. சரவணன், ஆராய்ச்சியாளா்கள் அ. தணிகைவேல், கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.