முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 12:36 AM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம், முகமது அலி தெருவைச் சோ்ந்த முகமது அமான் மகன் நிகாஷ் நசீா்(19). இவா் கொலை மிரட்டல் மற்றும் வழிப்பறி முயற்சி வழக்குகளில் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் கீதா பரிந்துரையின் பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவுப்படி , அவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் புதன்கிழமை அடைத்தனா்.