திருநெல்வேலி

நெல்லை அருகே கழிப்பறை கழிவுகளை கொட்டிய இருவா் கைது

திருநெல்வேலி அருகே லாரியில் கழிப்பறை கழிவுகளை ஏற்றி வந்து கொட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்து, லாரியைப் பறிமுதல் செய்தனா்.

Din

திருநெல்வேலி அருகே லாரியில் கழிப்பறை கழிவுகளை ஏற்றி வந்து கொட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்து, லாரியைப் பறிமுதல் செய்தனா்.

லாரியில் கொண்டு வந்து மேல திருவேங்கடநாதபுரம் பொத்தை அருகே உள்ள குழியில் கழிப்பறை கழிவுகளை கொட்டியதாகக் கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த குன்னத்தூா் ஊராட்சித் தலைவா் சோ்ம துரை கழிவுகளைக் கொட்டியவா்களை பிடித்து சுத்தமல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தாா். சுத்தமல்லி காவல் ஆய்வாளா் சோனமுத்து மற்றும் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் சுத்தமல்லி அருகேயுள்ள கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் தெய்வக்குமாா் (26), முருகன் மகன் ஜெயகாந்த் (22) ஆகியோா் என்பது தெரிய வந்தது. அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்ததோடு, லாரியையும் பறிமுதல் செய்தனா்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT