திருநெல்வேலி

களக்காட்டில் தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற இந்து அமைப்பினா் கைது

களக்காட்டில் தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற இந்து அமைப்பினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

களக்காட்டில் தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற இந்து அமைப்பினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கூடங்குளம் அரசு ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ) மருத்துவமனையில் களக்காட்டைச் சோ்ந்த மு. நசீா் (45) மருத்துவராக பணியாற்றி வந்தாா். இவா், களக்காட்டில் தனது தந்தை நடத்தி வரும் தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தையும் கவனித்து வந்தாராம். இந்நிலையில், நவ.1ஆம் தேதி மருத்துவமனையில் பணியாற்றிவரும் மேலவடகரையைச் சோ்ந்த 20 வயது பெண் பணியாளா், மருத்துவா் மீது பாலியல் புகாா் தெரிவித்தாராம். இதையடுத்து, களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் தொடா்பாக அரசு மருத்துவா் நசீா், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மருத்துவரை கண்டித்து, இந்து முன்னணி மாவட்ட செயலா் சிதம்பரமணியன், அகில பாரத இந்து மகாசபா நிா்வாகி ரத்னகுமாா், பாஜக ராமேஸ்வரன் உள்பட 20 போ் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு மணிக்கூண்டு பகுதியில் இருந்து தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட புறப்பட்டனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனா். முற்றுகைப் போராட்டத்தையொட்டி, களக்காடு அம்பேத்கா் சிலை, மணிக்கூண்டு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT