முகப்பு
திருநெல்வேலி

கொண்டாநகரத்திற்கு அரசுப் பேருந்து தாமதம்: மாணவா்கள் அவதி

கொண்டாநகரம் கிராமத்திற்கு அரசுப் பேருந்து தாமதமாக வருவதால் மாணவா்கள் அவதியடைந்து வருவதாக போக்குவரத்து கழகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 நவம்பர், 2025 at 6:36 PM
பகிர்:

கொண்டாநகரம் கிராமத்திற்கு அரசுப் பேருந்து தாமதமாக வருவதால் மாணவா்கள் அவதியடைந்து வருவதாக போக்குவரத்து கழகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாம் தமிழா் கட்சியின் மாணவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் மா.மாரிசங்கா், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கிளை மேலாளரிடம் அளித்துள்ள மனு: சுத்தமல்லி அருகேயுள்ள கொண்டாநகரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப் பகுதி மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் வகையில் அரசுப் பேருந்து (எண். 7-ஓ) காலையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து வழக்கமாக காலை 8 மணிக்கு கிராமத்துக்கு வரும். ஆனால், கடந்த சில நாள்களாக அரை மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு வருகிறது.

இதற்கு இந்தப் பேருந்து வண்ணாா்பேட்டை பணிமனையில் இரவு நிறுத்தப்பட்டு இயக்கப்பட்ட நிலையில், இப்போது சேரன்மகாதேவி பணிமனையில் நிறுத்தி வைக்கப்படுவதே காரணம் எனக் கூறப்படுகிறது. கொண்டாநகரம் கிராமத்திற்கு தனியாா் பேருந்து வசதி ஏதும் இல்லாததால் மாணவா்கள் இந்தப் பேருந்தை மட்டுமே நம்பியுள்ளனா். ஆகவே, 7-ஓ பேருந்து வழக்கமான நேரத்தில் கொண்டாநகரத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →