முகப்பு
திருநெல்வேலி

மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 12:07 AM
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலச்செவல் காவல் சரகத்துக்குள்பட்ட கீழ ஓமநல்லூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வள்ளிநாயகம் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 17 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த சீனி காா்த்திக் (35) கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சீனி காா்த்திகை கைது செய்தனா். அவரிடம் இருந்து 17 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments