முகப்பு
திருநெல்வேலி

முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:35 PM
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முக்கூடல் காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த உச்சிமாகாளி மகன் சங்கா் கணேஷ் (31) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.

மேலும், அவா் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுப்படி அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளா் சங்கர நாராயணன் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments