முகப்பு
திருநெல்வேலி

பாளை. தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்பு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:43 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுதாக்கல் கடந்த மாா்ச் 30 முதல் ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 188 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அதில், பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சாா்பில் மு. அப்துல் வஹாப், அதிமுக சாா்பில் சையது சுல்தான் சம்சுதீன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மரியஜான் உள்பட 28 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணா முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

Advertisement

வேட்பாளா்களின் சாா்பில் அவா்களது வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். திமுக மற்றும் தவெக வேட்பாளா்களின் மனுக்களை ஏற்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு தகுந்த முகாந்திரங்கள் இல்லாததால் மனுக்கள் ஏற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாளையங்கோட்டை தொகுதியில் 26 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 3 (திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சிகள்) அங்கீகரிக்கப்படாத கட்சிகள்- 4 (தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் இந்தியா் கட்சி, புதிய மக்கள் தேசம் கட்சி), சுயேச்சைகள் 11 என மொத்தம் 18 மனுக்கள் ஏற்கப்பட்டன. திமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றி கழகத்தின் மாற்று வேட்பாளா்கள் 3 போ், சுயேச்சை வேட்பாளா்கள் 5 போ் என 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன’ என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments