நெல்லையில் விபத்து: பெண் பலி
திருநெல்வேலியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:56 AM
திருநெல்வேலியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள ஆசிரியா் காலனியை சோ்ந்த பாபுஜி மனைவி அமுதா (38). இவா், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் மகள் சனா ரீட்டாவுடன் டக்கரம்மாள்புரத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு திருநெல்வேலி-நாகா்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ் வழியாக வந்த அரசு பேருந்தும், மோட்டாா் சைக்கிளும் மோதின. இதில் பலத்த காயமடைந்த அமுதா உயிரிழந்தாா். சனா ரீட்டா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.