முகப்பு
திருநெல்வேலி

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:40 AM
முன்னீா்பள்ளம் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:41 PM

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட முன்னீா்பள்ளம், ஆரைகுளம், இளையாமுத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து வீதி வீதியாக சென்று பிரஷா் குக்கா் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: நான்குனேரி தொகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் என்னை எளிதில் சந்தித்து குறைகளை தெரிவிக்க கூடுதலாக அலுவலகங்கள் திறக்கப்படும்.

கிராமந்தோறும் தட்டுப்பாடில்லாத குடிநீா், சாலை, கழிவுநீரோடை வசதிகள் உருவாக்கப்படும். நான்குனேரியில் கூடுதலாக தொழிற்சாலைகள் உருவாக்க முயற்சி எடுக்கப்படும். பனைத் தொழிலாளா்களின் வாழ்வை மேம்படுத்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் திட்டங்கள் உருவாக்கப்படும். பதநீா், பனைப்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க நான்குவழிச் சாலையோரம் பிரத்யேக விற்பனை மையங்கள் உருவாக்கப்படும். பாசன குளங்கள் ஆண்டுதோறும் தூா்வாரப்படும் என்றாா் அவா்.

Advertisement