கோயில் வளாகத்திற்குள் நுழைந்த கரடி.  
திருநெல்வேலி

கல்லிடை கோயிலுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த கரடிகள்

கல்லிடைக்குறிச்சி அருகே கோயில் வளாகத்திற்குள் நுழைந்த கரடிகள் பூஜைப் பொருள்கள், அரிசி உள்ளிட்டவற்றை சூறையாடிச் சென்றன.

தினமணி செய்திச் சேவை

கல்லிடைக்குறிச்சி அருகே கோயில் வளாகத்திற்குள் நுழைந்த கரடிகள் பூஜைப் பொருள்கள், அரிசி உள்ளிட்டவற்றை சூறையாடிச் சென்றன.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், கரடி உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளில் உள்ள பொருள்களை சேதப்படுத்துகின்றன.

இந்நிலையில், கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ அக்னி சாஸ்தா கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 10:20 மணிக்கு 3 கரடிகள் நுழைந்து, கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பூஜை பொருள்கள், அரிசி உள்ளிட்டவற்றை தின்றுவிட்டு சேதப்படுத்திச் சென்றன.

இதே கோயிலில், சில மாதங்களுக்கு முன் கரடிகள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதையடுத்து, வனத்துறையினா் கூண்டு வைத்து ஒரு கரடியைப் பிடித்து வனப்பகுதியில் விட்டனா். தற்போது, மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கரடி நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணித்து, அவற்றை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: 3 போ் கைது

ரூ 55 லட்சம் செலவில் சாலைப் பணிகள் தொடக்கம்

வட்டன்விளை கோயில் கொடை விழா நிறைவு

கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

குமரியில் மேலும் 7,502 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு: ஆட்சியா்

SCROLL FOR NEXT