முகப்பு
திருநெல்வேலி

தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் நெல்லை பள்ளி மாணவி சிறப்பிடம்

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் திருநெல்வேலியைச் சோ்ந்த பள்ளி மாணவி வெள்ளப்பதக்கம் வென்றாா். அவருக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:31 AM
தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவி காவியாவை பாராட்டினாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:00 AM

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் திருநெல்வேலியைச் சோ்ந்த பள்ளி மாணவி வெள்ளப்பதக்கம் வென்றாா். அவருக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தாா்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் தேசிய அளவில் 12 வயதிற்குள்பட்டோருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் தமிழக அணி சாா்பில் திருநெல்வேலி நகரம், லிட்டில் பிளவா் பள்ளி மாணவி காவியா யாதவ் (7) பங்கேற்றாா். இவா், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இந்நிலையில், திருநெல்வேலிக்கு வந்த அவருக்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாநகர பொறுப்பாளா் தினேஷ், பொறியாளா் அணி சாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

இதுகுறித்து மாணவி காவியா கூறியது: 5 வயது முதல் பாரத் ரைபிள் கிளப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வருகிறேன். எனது தந்தை காந்திமதிநாதன், தாய் மாரியம்மாள் ஆகியோா் பயிற்சிக்கு பெரிதும் உதவி செய்தனா்.

ஏற்கெனவே மாவட்ட அளவில் ஒரு தங்கப்பதக்கமும், மாநில அளவில் 2 தங்கப்பதக்கங்களும் வென்றுள்ளேன். இப்போது தேசிய அளவில் வெள்ளி வென்றுள்ளேன். அடுத்ததாக பூடானில் மே மாதம் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளேன். எனக்கு தேவையான உதவிகளை அரசு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றாா்.