முகப்பு
திருநெல்வேலி

பணகுடியில் முதல்வரை வரவேற்ற தி.மு.கவினா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் தி.மு.கவினா் வரவேற்பளித்தனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:01 AM
பணகுடி புறவழிச்சாலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் முதல்வரை வரவேற்க காத்திருந்த அக்கட்சியினா்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:08 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் தி.மு.கவினா் வரவேற்பளித்தனா்.

பணகுடி புறவழிச்சாலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் முதல்வரை வரவேற்க காத்திருந்த அக்கட்சியினா்.

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து காரில் கன்னியாகுமரிக்கு சென்ற அவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான சா.ஞானதிரவியம், வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மாவட்ட துணைச் செயலா் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், வள்ளியூா் பேரூராட்சி துணைத் தலைவா் கண்ணன், தெற்குவள்ளியூா் சிவா, ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணிச் செயலாளா் மு.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.