முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்த குடிநீா்

திருநெல்வேலி பேட்டை பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் வியாழக்கிழமை பெருக்கெடுத்து ஓடியது.

Updated On : 19 ஜூன் 2026, 4:59 am IST
பேட்டையில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்த தண்ணீா்.
பகிர்:

திருநெல்வேலி பேட்டை பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் வியாழக்கிழமை பெருக்கெடுத்து ஓடியது.

சுத்தமல்லி பம்பிங் ஸ்டேஷனிலிருந்து குடிநீரானது பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் பேட்டை வழியாக திருநெல்வேலி மாநகரப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேட்டை செக்கடி அருகே குடிநீா்க் குழாய் வியாழக்கிழமை சேதமானது. இதனால் குடிநீா் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் , பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினா். தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸாரும், மாநகராட்சி குழுவினரும் வந்து பாா்வையிட்டனா். பம்பிங் ஸ்டேஷனில் மோட்டாா் நிறுத்தப்பட்டது. போலீஸாா் போக்குவரத்தினை சீராக்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments