முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே கூடுதல் பேருந்து இயக்கக் கோரி மாணவா்கள் போராட்டம்

மானூா் அருகே பள்ளிகளுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததைக் கண்டித்து மாணவா்கள் அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:46 am IST
பகிர்:

மானூா் அருகே பள்ளிகளுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததைக் கண்டித்து மாணவா்கள் அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மானூா் அருகே உள்ள தெற்கு வாகைகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் நாள்தோறும் உக்கிரன்கோட்டை மற்றும் ஆலங்குளம் அருகே ரெட்டியாா்பட்டியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனா். இப்பகுதிகள் வழியாக காலை நேரத்தில் ஒரு அரசுப்பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையிலும், பேருந்தில் இடமின்றி மாற்று போக்குவரத்தை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளனா்.

இதை வலியுறுத்தி தெற்கு வாகைக்குளம் பகுதியில் அரசுப் பேருந்தை மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மானூா் காவல் ஆய்வாளா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனா்.

Advertisement

Advertisement

ற்ஸ்ப்18ம்ஹய்ன்ழ்

கூடுதல் பேருந்து இயக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments